
திரு. துஷாரா, இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனம் (CA Sri Lanka) வழங்கும் Fellow Member தகுதியைப் பெற்றவர். மேலும், University of Colombo பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தையும், University of Kelaniya பல்கலைக்கழகத்தில் கணக்கியல் சிறப்புப் பிரிவுடன் இரண்டாம் வகுப்பு மேல் தரத்தில் வணிக மேலாண்மை சிறப்பு பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் இலங்கையின் Certified Management Accountants நிறுவனம், Certified Professional Managers நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் Chartered Institute for Securities & Investment (CISI) ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார்.
கணக்கியல், தணிக்கை, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் அபாய மேலாண்மை ஆகிய துறைகளில் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் அனுபவம் கொண்ட திரு. துஷாரா, Ernst & Young (Sri Lanka & Maldives) நிறுவனத்தில் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கி, அங்கு CA Sri Lanka தொழில்முறை பயிற்சியை நிறைவு செய்தார். அதன் பின்னர், இலங்கை மற்றும் பிஜி தீவுகளிலுள்ள முன்னணி பெருநிறுவனங்களில் மூத்த தலைமைப் பொறுப்புகளை வகித்தார்.
Janashakthi Finance PLC நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர், அவர் 15 ஆண்டுகள் Senkadagala Finance PLC நிறுவனத்தின் தலைமை அபாய அதிகாரியாக (Chief Risk Officer) பணியாற்றினார். அந்தப் பொறுப்பில்,சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் நிறுவனமட்ட அபாய மேலாண்மை செயல்பாடுகளுக்கு தலைமை தாங்கினார்.